Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தலைமை விஜய் மக்கள் இயக்கம் மற்றும் இளைய தளபதி விஜய் ரசிகர் மன்றம் சார்பில் இளையதளபதி விஜயின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு காலை கடையின் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதேபோன்று சாரங்கபாணி சன்னதி உள்ள யானையடி துவக்கப்பள்ளி உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலையணிவித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனா புத்தகங்கள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியை கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறப்பு ரத்ததான முகாம், பொதுமக்களுக்கு மதிய உணவு, மற்றும் நலத்திட்ட உதவிகள் இந்த நிகழ்ச்சிகளை பெருநகர தலைவர் தங்கதுரை, பெருநகர செயலாளர் செந்தில்குமார், பெருநகர பொருளாளர் பெலிக்ஸ், துணை தலைவர் கார்த்திக், மற்றும் பெருநகர துணை அமைப்பாளர்கள் சுபாஷ், அரசு, பிரபு, லோகேஷ், பாபு, ரஞ்சித் மற்றும் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.